யாழ்ப்பாணம் பருத்தித்துரை பொலிஸ் சோதனை சாவடியில் வைத்தே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசாரின் கட்டளையினை பொருட்படுத்தாது செல்ல முட்பட்ட நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான 23 வயதுடைய நபர் யாழ், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.
காயமடைந்த நபர் காயமுற்று, வீட்டை நோக்கி செல்லும் போதே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது பாதுகாப்பு சோதனை சாவடி மீது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு, கல் வீச்சுக்கள் வந்ததாகவும் யாழ் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.