மீண்டும் ஆரம்பமாகும் வெளியூர் தபால் சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் ஆரம்பமாகும் வெளியூர் தபால் சேவை!

தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்கான வெளியூர் தபால் சேவை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், வெளியூர் தபால் கடிதங்கள் மற்றும் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்கு ஆகாயம் மற்றும் கடல் மார்க்கமான சேவைகளுக்கான ஏற்றுக்கொள்ளல் இன்று (15) இலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தபால்நிலைய தலைவர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

சீனா, ஹொங்கோங், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், கட்டார், ஜேர்மனி மற்றும் இந்தியாவுக்கான ஆகாய தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

உலகெங்கும் வியாபித்திருக்கும் கொரொனா தொற்று காரணமாக இச்சேவையில் பிரமாதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.