அதனடிப்படையில், வெளியூர் தபால் கடிதங்கள் மற்றும் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்கு ஆகாயம் மற்றும் கடல் மார்க்கமான சேவைகளுக்கான ஏற்றுக்கொள்ளல் இன்று (15) இலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தபால்நிலைய தலைவர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
சீனா, ஹொங்கோங், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், கட்டார், ஜேர்மனி மற்றும் இந்தியாவுக்கான ஆகாய தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
உலகெங்கும் வியாபித்திருக்கும் கொரொனா தொற்று காரணமாக இச்சேவையில் பிரமாதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.