குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படையை சேர்ந்த மேலும் 26 சிற்பாய்கள் குணமடைந்துள்ளனர்.

அவர்களில் 20 பேர் கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவர்கள். ஏனைய 05 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும் எஞ்சிய ஒருவர் ஹோமாகம வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்றவர்களாவர்.

குறித்த சிற்பாய்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவர்களின் உடலில் இனி வைரஸ் இயக்கம் இடம்பெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றையதினம் வரை குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 177.

அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தொடருவார்கள் என்று கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.