கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படையை சேர்ந்த மேலும் 26 சிற்பாய்கள் குணமடைந்துள்ளனர்.
அவர்களில் 20 பேர் கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவர்கள். ஏனைய 05 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும் எஞ்சிய ஒருவர் ஹோமாகம வைத்திய சாலையிலும் சிகிச்சை பெற்றவர்களாவர்.
குறித்த சிற்பாய்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவர்களின் உடலில் இனி வைரஸ் இயக்கம் இடம்பெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றையதினம் வரை குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 177.
அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தாலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தொடருவார்கள் என்று கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.