முஸ்லிம்களின் உடல்களை மாத்திரம் குறிவைத்து தகனம் செய்வது அரசின் நோக்கமல்ல! -மொஹமட் முஸம்மில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் உடல்களை மாத்திரம் குறிவைத்து தகனம் செய்வது அரசின் நோக்கமல்ல! -மொஹமட் முஸம்மில்

முஸ்லிம்களின் உடல்களை மாத்திரம் குறிவைத்து தகனம் செய்வது அரசின் நோக்கமல்ல! -மொஹமட் முஸம்மில்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடல்களை மாத்திரம் குறிவைத்து தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல!

தகனம் செய்யப்பட்ட உடல்களை கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அடிப்படைவாதச் சம்பவங்களுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடல்களைத் தகனம் செய்ய வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவரது உடலை தகனம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. இதனை அரசியலாக்குவது முற்றிலும் தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.