அனைத்து மாவட்டங்கலுக்கிடையிலான பயணம் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
மேலும் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களுக்கிடையில் 26ஆம் திகதி முதல் சுகாதார விதிமுறைகளை பேணி பயணிக்க முடியும்.