புதிதாக திருமண பந்தத்தில் இணைவோர் இதனை செய்யக்கூடாது - சுகாதார அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிதாக திருமண பந்தத்தில் இணைவோர் இதனை செய்யக்கூடாது - சுகாதார அமைச்சு

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்னர் திருமண ஏற்பாடுகள் செய்து தடைப்பட்டவர்கள் மீண்டும் திருமணங்களை நடத்த முடியும். எனினும் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பாதி பேர் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனர் நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

மண்டபத்திற்குள் வருபவர்கள் முக கவசங்களை அணிய வேண்டும். ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மண்டபத்திற்குள் நுழைவற்கு முன்னர் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.

மண்டபத்திற்குள் நுழையும் இடத்தில் நீர் வழங்குவதற்கான கருவிகளை பொருத்த வேண்டும். மண்டபத்திற்கு வருவதற்கு முன்னரும், மண்டபத்தில் இருந்து வெளியேரும் போதும் அனைத்து உபகரணங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

நீர் பருகும் மற்றும் உணவு உண்ணும் தட்டுகள் விருந்தினர்களும் குடும்பத்தினரும் பயன்படுத்த கூடாது. உணவு பகிர்வதற்காக தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.

அதன் மூலம் பலர் ஒரு தட்டுகள் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியும். ஒரு குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் தடை விதித்தல் ஆகிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.