அதிகளவிலான நோயாளிகளை இனங்காணக்கூடிய பரிசோதனைகளின் தரம் மற்றும் அளவு இருப்பதையே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் அமேரிக்காவில் 1.5 மில்லியன் நோயாளிகள்இனங்காணப்பட்டுள்ளதோடு, அதில் 92,000 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இண்டாம் இடத்தில் ரஷ்யா 300,000 தொற்றாளர்களைகொண்டுள்ளது.
கொரோனா பரவலினை தொடர்ந்து அமேரிக்காவின் முதல் கெபினட் கூட்டம் இடம்பெற்றது.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி உலகின் மற்றைய நாடுகளை விட நாம் மிகவும் வெற்றிகரமாகபரிசோதனைகளை மேற்கொண்டு வருவதனாலேயே இவ்வாறு பலர் இனங்காணப்படுகிறார்கள் எனவும், இதனை அசுப நிகழ்வாககருதக்கூடாது எனவும் தெரிவித்தார்.