சுகாதார அமைச்சின் அறிவுரைகளுக்கு இனங்க வரையறுக்கப்பட்ட பணியாளர்களுடன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில் வாகன பதிவு, சாரதி அனுமதிபத்திரம் வழங்கல், வாகன இலக்க தகடு வழங்கல் மற்றும் வாகன பரிசோதனைகள்போன்ற சகல பணிகளும் வார நாட்களில் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும் ஒவ்வொருவரும் கீழுள்ள இலக்கங்களுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு திகதி மற்றும் நேரத்தினைபெற்றுக்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஒரு நாள் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.