இக்கொலைகளை நடத்திய நபர், பொலிஸார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
கடந்த வியாழக்கிழமை (28) இரவு குடும்பத்துக்கிடையிலான வாக்குவாதத்தையடுத்து மேற்படி நபர் தனது மனைவியர் இருவர், மகன், மகள் மற்றும் மருமகளை சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் அவரது வீட்டு பின்புறத்தில் பிணத்தை அடக்கம் செய்ய குழிகளை தோண்டியுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் வெள்ளி அதிகாலை அங்கு சென்று மேற்படி நபரை சரணடையுமாறு கூறினர்.
ஆனால், அந்நபர் சரணடைய மறுத்ததுடன் மேலும் நால்வரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன் பொலிஸார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர் எனவும், அதையடுத்து அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர் எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபரால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கபட்டிருந்தவர்கள் அவரின் மகன், இரு மகள்கள் மற்றும் ஒரு பேரன் எனவும் அவர்கள் நால்வரும் மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.