இலங்கையில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது இன்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தியுள்ளது.

அதனடிப்படையில் இன்று (31.05.2020 11.00 PM)  மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,633 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 801 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.