45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிப்பு!

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 45,000 வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

காலி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வீழ்ந்துள்ள மின்சார கம்பிகளை மீள இணைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இந்த பணிகளை துரிதப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.