இலங்கையில் பஸ் பிரயாணங்கள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கான சந்தர்ப்பமாக அமையும் என மொரட்டுவ பல்கலைக்கழகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
பஸ் பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் அது பரவும். சாதரணமாக குறித்த நபர் தும்மினாலோ அல்லது ஜன்னல் வழியாக உமிழ்ந்து துப்பினாலோ அதன் வழியாக ஏனையவர்களுக்கு வைரஸ் பரவும் என பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே பஸ்ஸில் பயணிப்பவர்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பேணி, முடியுமான வரை அவதானமாகவும் சமூக இடைவெளியை பேணியும் நடந்துகொள்ளவும்.