கொழும்பு, மாளிகாவத்தை மோதலில் 3 பேர் பலி! 9 பேர் பலத்த காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு, மாளிகாவத்தை மோதலில் 3 பேர் பலி! 9 பேர் பலத்த காயம்!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில், வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த 9 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் 300க்கும் அதிகமானோர் திரண்டு இருந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் குறித்த பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.