இலங்கை வரலாற்றில் முதன்முதலாக இடம் பிடித்த இன்றைய பங்கு பரிவர்த்தனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக இடம் பிடித்த இன்றைய பங்கு பரிவர்த்தனை!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய தினம் (21) பங்கு பரிவர்த்தனை முடிவின் போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 129.58 ஆக அதிகரித்து 4784.80 ஆக பதிவானது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியான வளர்ச்சியின் பின்னர் நேற்றைய தினம் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 45 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்த நிலையில் மீண்டும்  வழமைபோல் வளர்ச்சியை காட்டிய அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 2.78 சதவீத வளர்ச்சியை அடைந்தது. 

இதேவேளை நாளின் முக்கிய விடயமாக  S&P SL 20 சுட்டெண் இன்றைய நாளில் வரலாற்றில் அதிகமான சதவீதத்தில் வளர்ச்சியை எட்டியதன் ஊடாக இன்றைய தினம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 

S&P SL 20 சுட்டெண் முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 6.98 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 

இன்றைய நாளில் மொத்த பங்கு பரிவர்த்தனை 2.3 பில்லியன் ரூபாவாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.