அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்களின் ஒருவர் இராணுவச் சிப்பாய் என்றும் ஏனைய 07 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுவரை 801 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.