33 மேலதிக பயண எண்ணிக்கையை நாளை முதல் சேர்க்கப்படவுள்ளதாக புகையிரத வாரியத்தின் துணை பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இது வேலைக்காக வேண்டி பயணிப்போருக்கு மட்டுமே பிரத்தியேகமாக இச் சேவை அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாளை முதல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது அடுத்த வாரத்தில் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக SLTB தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்திருந்தார்.