கொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்கு ஏராளமான மக்கள் வருவதாக கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் விசேட விடுமுறை மற்றும் வீட்டில் இருந்தவாறு பணியாற்றுவதற்கான வாரத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை மட்டுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.