பாராளுமன்றத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளேன்! - ஞானசார தேரர் அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளேன்! - ஞானசார தேரர் அதிரடி!

கொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு ஏராளமான மக்கள் வருவதாக கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு அரசாங்கம் விசேட விடுமுறை மற்றும் வீட்டில் இருந்தவாறு பணியாற்றுவதற்கான வாரத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை மட்டுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடு குறித்து தனக்கு எந்த வாதமும் இல்லை என்றாலும், நாட்டின் சட்டங்களை அவரால் தனியாக உருவாக்க முடியாது.

நாட்டின் அனைத்து தேசிய சக்திகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, அத்துரலிய ரத்தன தேரர் தலைமையில் “எங்கள் மக்கள் சக்தி” கட்சி உருவாக்கப்பட்டது.

எவ்வாறெனினும் அந்த கட்சி கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகல மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.