ஜனாதிபதியின் மனைவிக்கு அபராத பத்திரம் எழுதிய போலிசார்.!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் மனைவிக்கு அபராத பத்திரம் எழுதிய போலிசார்.!

ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ பயணித்த வாகனம் பொலிஸாரிடம் சிக்கியமையினால் அபராதம் செலுத்த நேரிட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.