ஹக்கீம் - ரிஷாத் மீது விரைவில் நடவடிக்கை எடுங்கள்! -இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹக்கீம் - ரிஷாத் மீது விரைவில் நடவடிக்கை எடுங்கள்! -இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவே வழிநடத்தியதாக ராவணா பலய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ரிஷாத் பதியூதீன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

புதிய இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜயந்த சமரவீர இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு ஆசி வழங்குவதற்காக பௌத்த தலைமை பிக்குகள் அழைக்கப்பட்டிருந்ததோடு இதில் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று நாட்டிலிருந்து பலர் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள். அண்மையில் நிஷாந்த டி சில்வா என்ற அதிகாரி தப்பிச்சென்றார். அதன் பின்னர் ஷாணி அபேசேகர உள்ளிட்ட திருடர்கள் தப்பிச்செல்லப் பார்க்கின்றார்கள்.

சிறிகொத்தவில் நடத்திய ஊடக சந்திப்பில் இதுபற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று கூறியிருக்கின்றார். அவர்கள் சொன்னதைத்தான் அந்த அதிகாரிகள் செய்தார்கள்.

சிறிகொத்தவே குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பாதுகாத்தது. இவ்வாறு தப்பிச் செல்லாத ரிசாட் பதியுதீன் மற்றும் ஹக்கீம் போன்றவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு மிகவிரைவில் பதிலளிக்கவேண்டும்.

மக்கள் இவற்றையே எதிர்பார்க்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே திரிகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-Jaffna Muslim

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.