வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளப்படுத்தி தகவல்களை வெளியிட்டவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளப்படுத்தி தகவல்களை வெளியிட்டவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பாகவும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது வெள்ளை வேன் சாரதியென தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட நபர் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்ஸவே என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக தான் பணியாற்றியதாகவும் குறித்த நபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

-NewsHub


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.