கொழும்பில் Uber Eats மூலம் உணவை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் Uber Eats மூலம் உணவை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

colombo snail uber eats
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவுகளை விநியோகிக்கும் நடமாடும் சேவையாக Uber Eats மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப்பொதியிலேயே நத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதன்போது உணவகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிசி பொதியில் நத்தைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.