தமிழர்களை அழித்த சிங்கள அடிப்படைவாதிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழர்களை அழித்த சிங்கள அடிப்படைவாதிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்!

இந்து கோயில்களுக்குள் பெளத்த துறவிகளின் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் என தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (01) காணாமல்போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் 986வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி நாங்கள் கூறுகின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுபாளர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் புருஷோதமன் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளான இன்று நாங்கள் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம்.

நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை. தமிழர்களை அழித்தவர்களுக்கும் , சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள்.

ஒன்றுபட்ட ஒருமித்த நாட்டுக்குள் ஐக்கிய இராச்சிய தீர்வையே சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ளது.

மாகாணங்களுக்கு அதிகார பரவல் என்பது பொய், சிங்களவர்களே சிங்களவர்களை ஆட்சி புரிகின்ற நாட்டில் சிங்கள மாகாணங்களுக்கு எதற்கு அதிகாரம்?

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனக் காட்ட மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தமிழர்களை பாதுகாக்க தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களியுங்கள்.

இந்து கோயில்களுக்குள் பெளத்த துறவிகளின் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள், தமிழ் வேட்பாளர்களுக்கு சிங்கள மக்கள் வாக்களிக்காத போது தமிழர்கள் மட்டும் ஏன் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

அவர்கள் செய்த இன அழிப்பையும், போர்க்குற்றங்களையும் சர்வதேசத்திற்கு காட்டி எமக்கான சுகந்திரத்திற்கு உலக நாடுகளின் ஆதரவை பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெவனிதா கூறுகையில்,

நாங்கள் 986வது நாளாக போராட்டத்தை மேற்கொள்கிறோம். சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார் ஓ.எம்.பி அலுவலத்தை நான் வரவேற்கிறேன் என, ஆனால் நாங்கள் கூறியிருக்கிறோம் ஓ.எம்.பி அலுவலகம் எங்களுக்கு வேண்டாம்.

எமக்கு இலங்கை அரசாங்கம் எப்போது தீர்வு தரும். நாங்கள் எங்கள் பிள்ளைகளை எப்போ காண்பது? அதனால் நாங்கள் சர்வதேசத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

எம் பிள்ளைகள் குறித்து அவர்களே விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். எம் பிள்ளைகளை மீட்டுத்தரவேண்டும் என்று கேட்கிறோம்என்றும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.