தேர்தல் கட்டுப்பணம் இருவருக்கு மாத்திரம் திருப்பி ஒப்படைப்பு! -தேர்தல்கள் ஆணைக்குழு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் கட்டுப்பணம் இருவருக்கு மாத்திரம் திருப்பி ஒப்படைப்பு! -தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடைமையாக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு அமைய, அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகளை பெற தவறும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே கட்டிய கட்டுப்பணத்தை மீளப் பெற முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 50ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.