இன்னும் இரண்டு வருடங்களுக்கு விளையாட  திராணி இருக்கிறது! –லசித் மாலிங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் இரண்டு வருடங்களுக்கு விளையாட  திராணி இருக்கிறது! –லசித் மாலிங்க

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணிக்கு தலை­மை­தாங்­கு­வ­தற்கு குறி­வைத்­துள்ள லசித் மாலிங்க, தன்னால் அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு விளை­யாட முடியும் என நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.


அடுத்த வருட இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­யுடன் ஓய்­வு­பெ­று­வ­தாக ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்த 36 வய­தான லசித் மாலிங்க, இப்­போது அந்த எண்­ணத்தை மாற்­றிக்­கொண்டு தன்­னிடம் இன்னும் இரண்டு வரு­ட­க­ளுக்கு விளை­யா­டக்­கூ­டிய திராணி இருப்­ப­தாக கூறி­யுள்ளார்.

முன்னாள் தலை­வர்­க­ளான ஏஞ்­சலோ மெத்யூஸ், திசர பெரேரா ஆகிய இரு­வரும் இங்கு நடை­பெற்ற நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான இரு­பது 20 தொடரில் இடம்­பெ­றாத நிலையில் இளம் வீரர்­களைக் கொண்ட  இலங்கை அணியின் தலை­வ­ராக மீண்டும் பொறுப்­பேற்ற மாலிங்க, அத் தொடரின் கடைசிப் போட்­டியில் ஹெட் – ட்ரிக்­குடன் நான்கு பந்­து­களில் 4 விக்­கெட்­களை வீழ்த்­தி­யதன் மூலம் புத்­தெ­ழுச்சி பெற்­ற­வ­ராகக் காணப்­ப­டு­கின்றார்.

‘உலகக் கிண்ண கிரிக்­கெட்டில் நான் தலை­வ­ராக செயற்­ப­ட­வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்­பிட்­டது. ஆனால், இலங்­கையில் என்ன நேரும் என்­பதை அனு­மா­னிக்க முடி­யாது’ என்று மாலிங்க தெரி­வித்­துள்ளார்.

‘இரு­பது 20இல் நான்கு ஓவர்­கள்தான் பந்­து­வீ­ச­வேண்டும். என்­னிடம் உள்ள ஆற்­றலை, சக்­தியைக் கொண்டு இரு­பது 20 பந்­து­வீச்­சா­ள­ராக என்னால் சமா­ளிக்க முடியும்.

அணித் தலை­வ­ராக உலகின் பல பாகங்­களில் இரு­பது 20 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளேன். எனவே இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு என்னால் சமா­ளிக்க முடியும் என உணர்­கின்றேன்’ என்றார் மாலிங்க.சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்­கெட்டில் 100 விக்­கெட்­களைப் பூர்த்­தி­செய்த ஒரே ஒரு வீர­ரான லசித் மாலிங்க, டெஸ்ட், சர்­வ­தேச ஒருநாள், சர்­வ­தேச இரு­பது 20 ஆகிய மூவகை கிரிக்­கெட்­டிலும் 100 விக்­கெட்­களைப் பூர்த்­தி ­செய்த ஒரே ஒரு­வ­ரா­கவும் திகழ்­கின்றார்.

அது மட்­டு­மல்­லாமல் சர்­வ­தேச ஒருநாள், சர்­வ­தேச இரு­பது 20 ஆகிய இரு­வகை கிரிக்கெட் போட்­டி­களில் நான்கு பந்­து­களில் 4 விக்­கெட்­களை அடுத்­த­டுத்து வீழ்த்­திய ஒரே ஒருவர் என்ற சாத­னைக்கும் மாலிங்க உரித்­தா­ன­வ­ராவார்.

‘இலங்கை கிரிக்­கெட்டில் ஆற்றல் மிக்க, விக்­கெட்­களை வீழ்த்­தக்­கூ­டிய வீர­ருக்கு பற்­றாக்­குறை காணப்­ப­டு­கின்­றது. உட­ன­டி­யாக ஒருவார் கிடைப்பார் என்று கூற­மு­டி­யாது. ஒரு வருடம், ஒன்­றரை வருடம் ஆகலாம். விக்­கெட்­களை வீழ்த்­து­வ­துதான் முக்­கியம்.

வருங்காலத்தில் வீரர்களைத் தெரிவு செய்வது யாராக இருந்தாலும் இதனைப் புரிந்து செயற்படவேண்டும் என நான் கருதுகின்றேன். சிறந்த வீரர் ஒருவர் வாங்கில் அமர்ந்திருந்தால் ஒருவராலும் கற்க முடியாது’ என்றார் மாலிங்க.

-metro

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.