ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம்கள் செய்த தவறு! -முஸம்மில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம்கள் செய்த தவறு! -முஸம்மில்

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படைகளை கைவிட்டு முஸ்லிம்கள் தேசிய அரசியலில் இணைய வேண்டும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

2010ஆம் ஆண்டு தேர்தலின்போது போரை முன்னெடுத்து சென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லிம்கள் அதிகளவில் வாக்களித்தனர்.

எனினும் இம்முறை கோட்டாபயவுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. இதனை விடுத்து அவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தனர்.

இதனால் ஏமாற்றமே கிடைத்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக மக்களை திசைதிருப்புகின்றனர்.

இதனை முஸ்லிம் மக்கள் நம்பக்கூடாது ஜனாதிபதி தேர்தலில் செய்த தவறை பொதுத்தேர்தலில் நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.

-JM

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.