
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
2010ஆம் ஆண்டு தேர்தலின்போது போரை முன்னெடுத்து சென்ற பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லிம்கள் அதிகளவில் வாக்களித்தனர்.
எனினும் இம்முறை கோட்டாபயவுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. இதனை விடுத்து அவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்தனர்.
இதனால் ஏமாற்றமே கிடைத்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்காக மக்களை திசைதிருப்புகின்றனர்.
இதனை முஸ்லிம் மக்கள் நம்பக்கூடாது ஜனாதிபதி தேர்தலில் செய்த தவறை பொதுத்தேர்தலில் நிவர்த்தி செய்துகொள்ளவேண்டும் என்று முஸம்மில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-JM