யட்டியாந்தோட்டை தாக்குதல் சம்பவம் குறித்து மகிந்த பிறப்பித்த உத்தரவு! ஏழு பேர் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யட்டியாந்தோட்டை தாக்குதல் சம்பவம் குறித்து மகிந்த பிறப்பித்த உத்தரவு! ஏழு பேர் கைது

attack in Yatiyanthota
யட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச விசாரணைக்குப் பணித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் நாளை (20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, யட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பினுள் நுழைந்த சிலர், நேற்று (18) இரவு தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும், மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.