
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்டதன் காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387,951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்த நிலையில்,வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.