ஷானி அபேசேகரவை கைது செய்ய வேண்டும் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷானி அபேசேகரவை கைது செய்ய வேண்டும் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை கைது செய்ய வேண்டும் என தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு கோரியுள்ளது.

அந்த அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி ஓய்வு நிலை மேஜர் அஜித் பிரசன்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஷானி அபேசேகர, நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் விசாரணைகளை மேற்கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நேற்று (24) தமது குடும்பத்தாருடன் இரகசியமாக சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.

அவர் ஷானி அபேசேகரவின் ஆலோனைக்கமைய சர்சைக்குரிய பல சம்பங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் அவர்களுக்கு எதிராக பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தருணத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோகர் நிஷாந்த டி சில்வா இரகசியமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் அனுமதியின்றி அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

-Athavan News

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.