
அந்த அமைப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி ஓய்வு நிலை மேஜர் அஜித் பிரசன்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஷானி அபேசேகர, நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் விசாரணைகளை மேற்கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நேற்று (24) தமது குடும்பத்தாருடன் இரகசியமாக சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அவர் ஷானி அபேசேகரவின் ஆலோனைக்கமைய சர்சைக்குரிய பல சம்பங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் அவர்களுக்கு எதிராக பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தருணத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோகர் நிஷாந்த டி சில்வா இரகசியமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் அனுமதியின்றி அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
-Athavan News