பாராளுமன்றம் குறித்து சபாநாயகரின் 3 முன்மொழிவுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றம் குறித்து சபாநாயகரின் 3 முன்மொழிவுகள்!

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து நாடாளுமன்றின் எதிர்காலம் குறித்த கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் ஆதரவு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள போதிலும், முழுமையான அமைச்சரவை இன்னும் பதலி விலகாத நிலையில் நாடாளுமன்றினை முன்னெடுத்துச் செல்ல மூன்று முன்மொழிவுகளை எடுத்துரைத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.

1. மார்ச் 1ம் திகதி பதவிக்காலம் முடிந்ததும் நாடாளுமன்றைக் கலைப்பது
2. மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாடாளுமன்றைக் கலைப்பது
3. புதிய ஜனாதிபதியின் தலைமையிலான காபந்து அரசமைக்க இடம் கொடுத்து நடைமுறை அமைச்சரவை பதலி விலகுவது ஆகியனவே அவை.

தற்சமயம் பெரமுன தரப்புக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில், ரணில் விக்கிரமசிங்க தரப்பு எடுக்கக் கூடிய முடிவு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.