மொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது!

மொறட்டுவை பிரதேசத்தில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மொறட்டுவை, எகொட உயன சந்தியில் கூரிய ஆயுதங்களினால், தாக்கி குற்றவாளிகள் ஒருவரை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வீரமன் சேரசிங்க முன்னிலையில் இன்று நடைபெற்றது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நான்கு பேரை வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.