சஜித்தின் குருணாகல் பேரணிக்கு தடை விதித்துள்ள பிரதமர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித்தின் குருணாகல் பேரணிக்கு தடை விதித்துள்ள பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியை நடாத்த வேண்டாம் என குறித்த தரப்பினர்களுக்கு கட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணி, கட்சித் தலைவரின் ஆலோசனைகணை ஏற்றுக் கொள்ளாமல் இடம்பெறும் செயற்பாடு என பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

அதன் காரணமாக, தான் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.