அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி! பொலிஸார் வெளியிட்டுள்ள சிசிடிவி காணொளி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி! பொலிஸார் வெளியிட்டுள்ள சிசிடிவி காணொளி

அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி தொடர்பில் விக்டோரியா பொலிஸார் சிசிடிவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

Monash பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்திருந்தார்.

கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் கார் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினர் தொடர்பான சிசிடிவி காணொளி ஒன்றை அந்நாட்டு பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

37 வயதான Shane Cochrane மற்றும் 33 வயதான Lauren Hindes தொடர்பிலான காணொளி ஒன்றையே அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் கைது செய்வதற்கான நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் அவர்களை கைது செய்வோம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.