கோத்தாபயவுக்கு எதிரான மனு கலிபோர்னியா நீதிமன்றில் 16 ஆம் திகதி விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோத்தாபயவுக்கு எதிரான மனு கலிபோர்னியா நீதிமன்றில் 16 ஆம் திகதி விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹின்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்துள்ள மனு, எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மானுவல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது புறக்கணிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணி அசொக டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வழக்கைத் தொடுத்துள்ள மனுதாரர், வெளிநாட்டில் வசிப்பவர் எனவும், அவருக்கும் அமெரிக்காவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், இதனால் அமெரிக்க நீதிமன்றத்துக்கு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள எந்தவித அதிகாரமும் இல்லையெனவும் சட்டத்தரணி அசோக டி சில்வா அமெரிக்க நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.