இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் புத்தரின் உருவம் பொறித்த உடை! உண்மை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் புத்தரின் உருவம் பொறித்த உடை! உண்மை வெளியானது!

yazh news
இந்தியாவில் மிக பிரபல்யமான கலம்காரி புடவை வகைகளில் வரையப்படும் உருவங்கள் புத்த பெருமானுடையது அல்லவென தெரியவந்துள்ளது.

அண்மைக்காலங்களாக இலங்கையில் இதுபோன்ற புத்தரினுடைய முகத்தை ஒத்த உடையணிந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வழிபடும் மஹவீர் ஜயந்தி எனும் தெய்வ சிலையின் முகம்தான் அது என்றும் கூறப்படுகின்றது.

குறித்த புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கான வர்ணங்கள் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுடன் இந்த புடவைகள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதியில் நெய்யப்படுகின்றன.

இது அப்பகுதியின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வகைப் புடவைகளில் வரையப்படும் உருவங்களுக்கு நிறம் பூசுவதற்கு தனியான வகைப் பேனை பயன்படுத்தப்படுகின்றது.

மாற்று முறைகளிலும் நிறம் பூசப்படுவதுடன் மேற்படி நிறங்கள் எல்லாம் கலம் எனவும் அவற்றை பூசுபவர்களை காரி எனவும் அழைப்பது வழமையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

அதேபோல் அப்பகுதியில் இந்து தர்மத்தை பின்பற்றுவோர் அதிகம் வாழ்வதால் விஷ்ணுவின் தச அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் புத்தப் பெருமான் என நம்பப்படுவதால் இலங்கையில் புத்தருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் மேற்படி பிரதேசத்தில் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது.

-Tamilwin

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.