ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (31) செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஏனைய கட்சிகள் தமது வேட்பாளரை அறிவிப்பதில் அவசரம் காட்டினாலும் ஐக்கிய தேசியக் கட்சி அவசரப்பட தேவையில்லை.

நாங்கள் எங்களது பயணத்தை மேற்கொள்வோம். எவரும் குழப்பமடைய தேவையில்லை. எமது வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இதனை நான் எதிர்க்கட்சியினருக்கு கூறுகிறேன். வேட்பாளர் யார் என்பதை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானித்து விட்டோம்.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.