
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெரிவுக் குழு இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிப்பது தொடர்பிலும், அதற்கான நியதிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய பதிலை வைத்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.