தெரிவுக் குழு இறுதி அறிக்கை தயாரிக்க முஸ்தீபு, நாளை உறுப்பினர்கள் கூட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெரிவுக் குழு இறுதி அறிக்கை தயாரிக்க முஸ்தீபு, நாளை உறுப்பினர்கள் கூட்டம்!

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டமொன்று நாளை (02) இடம்பெறவுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தெரிவுக் குழு இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிப்பது தொடர்பிலும், அதற்கான நியதிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய பதிலை வைத்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.