போரா சமூகத்தின் 10 நாள் சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போரா சமூகத்தின் 10 நாள் சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

போரா சமூகத்தின் சர்வதேச மாநாடு இன்று (01) கொழும்பு, பம்பலப்பிட்டி கரையோர வீதியிலுள்ள போரா பள்ளிவாயலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் போரா சமூகத்தினர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பம்பலப்பிட்டிய கரையோரப் பிரதேசத்தை மையப்படுத்தி நடாத்தப்படும் இந்த மாநாட்டுக்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி செய்யுது முபாசால் சையிதீன் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சில சிங்கள தீவிரவாத அமைப்புக்கள் தயாராவது தெரியவந்தவுடன், எதிர்வரும் 10 நாட்களுக்கு பொலிஸாரினால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கான நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.