
ராஜகிரியவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு பிரதேசத்தில் பேரணியை ஏற்பாடு செய்திருந்தோம். இதன்போது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கப்பட்டிருந்தன. இந்த மக்கள் பேரணி நடவடிக்கைளின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த துண்டு பிரசுரத்தினால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக 200 மில்லியன் ரூபா நஷ்டயீட்டைச் செலுத்துமாறு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் ஊடாக எனக்கு அறிவித்து எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. வழக்கு விசாரணைகளின்போது இது குறித்து அவர் சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
#மெட்ரோ