"ஹிஸ்புல்லாஹ்வுக்கு 200 மில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை!" –ரதன தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

"ஹிஸ்புல்லாஹ்வுக்கு 200 மில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை!" –ரதன தேரர்

yazh news
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்த பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள சதாம் செவன பௌத்த மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

கடந்த மாதம் 19 ஆம் திகதி மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு பிரதேசத்தில் பேரணியை ஏற்பாடு செய்திருந்தோம். இதன்போது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கப்பட்டிருந்தன. இந்த மக்கள் பேரணி நடவடிக்கைளின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த துண்டு பிரசுரத்தினால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக 200 மில்லியன் ரூபா நஷ்டயீட்டைச் செலுத்துமாறு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் ஊடாக எனக்கு அறிவித்து எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. வழக்கு விசாரணைகளின்போது இது குறித்து அவர் சட்டத்துக்கு முன் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

#மெட்ரோ

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.