ஹம்பாந்தோட்டை மேயருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹம்பாந்தோட்டை மேயருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஹம்பாந்தோட்டை நகர சபையின் தலைவர் எராஜ் பெர்னாண்டோவுக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு 2014ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேற்கொண்ட மேற்பார்வை விஜயத்தின் போது, போலி துப்பாக்கி ஒன்றை காட்டி, அவர்களை அச்சுறுத்தினார்கள் என்பது இவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

வழக்கின் ஐந்தாவது பிரதிவாதியான எச்.ஐ விமலசேன என்பவருக்கும் ஐந்து ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.