பல்கலை மாணவர்களுக்கு மஹிந்தவின் வாக்குறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலை மாணவர்களுக்கு மஹிந்தவின் வாக்குறுதி!

குளியாப்பிட்டியில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானப்பீடத்தை மூடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகலில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக வடமேல் பல்கலைக்கழகத்திற்கு குளியாப்பிட்டிய பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தை வாரிக்கொள்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக மாணவர்கள் இதன்போது முறையிட்டபோதே இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.