சவூதி பெண்களுக்கான புதிய நற்செய்தி! - இனிமேல் இதெற்கெல்லாம் அனுமதி தேவையில்லையாம் !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி பெண்களுக்கான புதிய நற்செய்தி! - இனிமேல் இதெற்கெல்லாம் அனுமதி தேவையில்லையாம் !!

சவுதி நாட்டில் வாழும் பெண்களுக்கென பல்வேறு விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்நாட்டு அரசு சவுதியினை நவீன மயமாக்கும் வகையில் சில முக்கிய விதிகளை சமீப காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கென முக்கிய விதிகளை மாற்றியது. பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை அரங்குகள் திறப்பு மற்றும் பெண்கள் செய்தியாளர்களாக நியமனம் என அனைவரும் வரவேற்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

இந்த விதிகளை நடைமுறைப்படுத்திய சவுதி அரசுக்கு, அந்நாட்டு மக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை நீக்கியுள்ளது.

புதிய விதியின்படி, 21 வயதை கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லலாம் என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.