நோர்வே பள்ளிவாசல் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம், சந்தேக நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நோர்வே பள்ளிவாசல் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம், சந்தேக நபர் கைது!

நோர்வேயில் பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள பியெரம் நகரிலுள்ள அல் நூர் இஸ்லாமிய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.

பல ஆயுதங்களை வைத்திருந்த நபர் ஒருவர், பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

பின்னர், பள்ளிவாசலில் தொழுவதற்குச் சென்ற ஒருவரால் துப்பாக்கிதாரி மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.