இன்று அறிமுகமாகின்றார் கோட்டா: தடல் புடல் ஏற்பாடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று அறிமுகமாகின்றார் கோட்டா: தடல் புடல் ஏற்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பதை இன்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தவுடன் நாட்டிலுள்ள 14,500 கிராம சேவக பிரிவுகளிலும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பொறுபேற்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது செய்யபட்டுள்ளன.

இந்த சந்தோசத்தைக் கொண்டாட அனைவருக்கும் நாங்கள் அழைப்பினை விடுக்கின்றோம். இன்று இடம்பெறவிருக்கின்ற நிகழ்விற்கு, தேசிய கொடியினை ஏந்தியவாரு பாற்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் சமைத்து அனைவரையும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டு கொள்கின்றோம் எனவும் நாவலப்பிட்டிய கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.