குச்சவெளிக் கடலில் நீராடச் சென்ற மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குச்சவெளிக் கடலில் நீராடச் சென்ற மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

திருகோணமலையின் குச்சவெளிக் கடலில் நீராடச் சென்ற வவுனியா மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இருந்து சிலர் வாகனம் ஒன்றில் குச்சவெளிப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

குச்சவெளி கடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் என சுற்றுலா சென்றவர்கள் நீராடிக்கொண்டிருந்த நிலையில் மாணவன் உட்பட இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற போதும் அது பயனளிக்காத நிலையில் இருவரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த த.ஐங்கரன் (வயது௨0) மற்றும் வவுனியா விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவனான உ.கிசாளன் (வயது 16) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நிலாவெளி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை நிலாவெளிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.