சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கஞ்சிப்பான இம்ரானின் பிறந்தநாள் கொண்டாட்டம்; நவ சிங்களே அமைப்பும் விமர்சனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கஞ்சிப்பான இம்ரானின் பிறந்தநாள் கொண்டாட்டம்; நவ சிங்களே அமைப்பும் விமர்சனம்!

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கொண்டாடப்பட்டுள்ளதாகவும், இதன்போது வெட்டப்பட்ட கேக் அப்பிரிவிலுள்ள உயர் அதிகாரிகள் முதல் அத்தனை பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நவ சிங்களே அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ஆம் திகதி இம்ரானின் பிறந்த நாள் காணப்பட்டது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், கஞ்சிபானே இம்ரான், அவரின் தந்தை, அவரது மூத்த சகோதரன் ஆகியோர் இணைந்தே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இவ்வாறு கேக் சாப்பிட்டவர்கள் அனைவரும் அதனை வாந்தி எடுப்பதற்கு தயாராகுமாறும் தேரர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், கஞ்சிபானே இம்ரானுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவர் சுமுகமான முறையில் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கும் வீடியொ காட்சியொன்று தன்னிடம் காணப்படுவதாகவும் அதனை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கஞ்சிபானே இம்ரானுடன் உறவு கொண்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் தேரர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.