
கடந்த மாதம் 13ஆம் திகதி இம்ரானின் பிறந்த நாள் காணப்பட்டது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், கஞ்சிபானே இம்ரான், அவரின் தந்தை, அவரது மூத்த சகோதரன் ஆகியோர் இணைந்தே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இவ்வாறு கேக் சாப்பிட்டவர்கள் அனைவரும் அதனை வாந்தி எடுப்பதற்கு தயாராகுமாறும் தேரர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், கஞ்சிபானே இம்ரானுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவர் சுமுகமான முறையில் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கும் வீடியொ காட்சியொன்று தன்னிடம் காணப்படுவதாகவும் அதனை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கஞ்சிபானே இம்ரானுடன் உறவு கொண்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் தேரர் மேலும் தெரிவித்தார்.