சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்க வேண்டும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையால் நிறைவேற்றம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்க வேண்டும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையால் நிறைவேற்றம்!!

இன்று காரைதீவு பிரதேச சபையில் தோடம்பழ மாளிகைக்காடு உறுப்பினர் பஸ்மீர் அவர்களால் கொண்டு வந்த "சாய்ந்தமருதுக்கு சபை வழங்கப்பட வேண்டும்" என்ற விஷேட தனிநபர் பிரேரணை ஏகமனதாக ஆளும் தரப்பினரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை வாக்கெடுப்பில் ஆதரவாக SLMC இஸ்மாயில் உறுப்பினர்கள் வாக்களித்தார். ஆனால் SLFP ஜஹிர், ACMC ஜலீல், SLMC ரணீஸ், காந்திபன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த ஓரிரு வாரத்துக்கு முதல் சகோதரர் பஸ்மீரை கல்முனை பிரேரணை தொடர்பாக விமர்சித்தார்கள். ஆனால் அவர் தூர நோக்குடன் செயற்பட்டதன் காரணமாக இன்று சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர். இது இவரின் முயற்சிக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

ஆனால் கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்களால் இதுவரை சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டு சென்று நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.