நீர்கொழும்பு சிலை தாக்குதலுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்கொழும்பு சிலை தாக்குதலுக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம்!!

நீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சுரூபம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம், இந்த தாக்குதலின் பின்னணியில் அடிப்படை வாதக்குழுக்கள் உள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பொதுஜனபெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

மேலும், நீர்கொழும்பு பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உறவுகளை இழந்த கத்தோலிக்க மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு கடுமையாக உழைத்து வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.