இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானம்!

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளையும் இரத்து செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்படுவதாக இந்திய மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று (07) பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பேரவை கூடியது.

இந்த கூட்டத்தின் போது இந்தியா தொடர்பில் 5 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளைக் கைவிடல், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முதலாவது தீர்மானமாகும்.

இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை சமர்ப்பித்தல் இரண்டாவது தீர்மானமாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.