இன்று முதல் கோப் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களின் பார்வைக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் கோப் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களின் பார்வைக்கு!

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் – COPE) நடவடிக்கைகள் இன்று (09) முதல் ஊடகங்களுக்காக திறந்து விடப்படுகின்றன.

இந்த கோப் குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாராளுமன்ற கூட்ட அறையில் பொருத்தப்பட்டுள்ள புதிய கெமரா தொகுதியை ஒப்படைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுடன் ஊடகங்களுக்கு கோப் குழுவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்கான அனுமதியும் உத்தியோகபுர்வமாக வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாகவும் இக்கூட்டம் ஊடகங்களின் பார்வைக்கு இன்று முதல் திறந்து விடப்படவுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.